
மேட்டூர் அணைக்கான நீர் வரத்து சற்று சரிந்துள்ளதால் அணை நிரம்புவதில் சில மணி நேரம் கால தாமதம் ஆகியுள்ளது. ஏற்கனவே கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகலில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்ட இருந்த நிலையில், அணைக்கான நீர் வரத்து சற்று சரிந்துள்ளதால் இன்று மாலை 6 மணி அளவில் முழு கொள்ளளவை எட்டும் என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் அணை கட்டிய 91 ஆண்டு கால வரலாற்றில் 44வது முறையாக இன்று தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளது.
இதனால் அணைக்கு வரும் நீர் வரத்தை அப்படியே வெளியேற்ற முடிவு செய்துள்ளனர். தற்போது மேட்டூர் அணையிலிருந்து 26,000 கன அடி நீர் பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது.