
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே கோனேகவுண்டனூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனையில் அந்த பெண் 8 மாத கர்ப்பிணியாக இருந்ததும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டதும் தெரிய வந்தது.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் ஷாலினி (25) என்பதும் அவரது கணவர் அஞ்சு என்பதும் தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 19ஆம் தேதி அவர் காணாமல் போனதாகவும் அது முதல் அவரை தேடி வந்த நிலையில் தற்போது சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார் என வேதனையாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் போலீசார் ஷாலினியின் செல்போனை ஆய்வு செய்ததில் அதில் மேகநாதன் (21), புகழேந்தி (19) ஆகியோர்களின் செல்போன் நம்பர்கள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது.
அதாவது ஷாலினிக்கு முதலில் மதியழகன் என்பவருடன் கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் பின்னர் அவரைப் பிரிந்து தன்னுடைய முன்னாள் காதலனான ஆஞ்சி (30) என்பவரை ஷாலினி திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் ஷாலினி மேகநாதனுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார்.
ஷாலினி தன் கணவனுக்கு தெரியாமல் மேகநாதனுடன் பழகிய நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்தனர். இதில் ஷாலினி என்னால் கர்ப்பமான நிலையில் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதன் காரணமாக கர்ப்பத்திற்கு நான்தான் காரணம் என கூறி என்னிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். ஆனால் எனக்கு அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாததால் தட்டிக் கழித்து வந்தேன்.
இருப்பினும் ஷாலினி கட்டாயப்படுத்தி என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியதோடு இருவரும் திருமணம் செய்து கொண்டு வேறு எங்காவது வேறு ஊருக்கு சென்று விடலாம் என்றார். நான் இதனால் அவர் மீது கடும் கோபத்தில் இருந்த நிலையில் பின்னர் என்னுடைய நண்பன் புகழேந்தியுடன் சேர்ந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.
கடந்த 19ஆம் தேதி இரவு ஷாலினி என்னிடம் பேச வேண்டும் என்று கூறிய நிலையில் நான், புகழேந்தி மற்றும் ஷாலினி மூவரும் வனப்பகுதிக்கு பைக்கில் சென்றோம். அங்கு வைத்து மீண்டும் ஷாலினி என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியதால் ஆத்திரத்தில் கத்தியால் அவரது கழுத்தில் குத்தினேன். இருப்பினும் வெறி தீராததால் மீண்டும் அவரைக் குத்தியதோடு பின்னர் தூக்கில் தொங்கவிட்டு துடிக்க துடிக்க கொன்றதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.