பாமக நிறுவனர் ராமதாஸ் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது,  கடந்த ஐந்து ஆண்டுகளாக ஐயா ஐயாவாக இல்லை. ஐயாவாக இருந்து எதனை சொல்லி இருந்தாலும் கண்களை மூடி கொண்டிருப்பேன்.

வயது முதிர்வின் காரணமாக ஐயா குழந்தையாக மாறிவிட்டார். தினமும் நிம்மதி இல்லாமல் தூக்கம் இல்லாமல் உள்ளேன். பெற்ற மகனையும் மருமகளையும் யாராவது பொதுவெளியில் விமர்சிப்பார்களா? அவர் ராமதாசாக இருந்திருந்தால் அப்படி பேசி இருப்பாரா? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமூக ஊடகங்களில் ராமதாஸ் யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம். ஐயாவை அவருடன் இருக்கும் மூன்று பேர் தங்கள் சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டதால் தலைவர் பதவிக்கு நான் வந்தேன்.

ராமதாஸுக்கு பிறகு நான் தலைவராக வேண்டும் என அப்போதே முடிவெடுத்துவிட்டேன். 12 ஆண்டுகளுக்கு முன்பு என்னை பாமகவின் தலைவராக இருக்குமாறு ராமதாஸ் கூறினார். ராமதாஸ் சொல்லித்தான் 2024ல் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன். அப்போதே சொல்லி இருந்தால் நான் ஏன் அதிமுக கூட்டணி வேண்டாம் என சொல்லப் போகிறேன்.