திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள். இன்று கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதித்து வனத்துறையினர் உத்தரவு பிறப்பித்தனர். கொடைக்கானல், யானைகள் நடமாட்டம் இருப்பதால் பயணிகள் பாதுகாப்பு கருதி, சுற்றுலா தலங்களுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளனர்.

அந்த வகையில் மக்கள் விரும்பி செல்லும்  பில்லர் ராக், குணா குகை, பைன் பாரஸ்ட், மோயர் பாயிண்ட், பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.