தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் மிகப் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் சமீபத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருள் வாங்கிய வழக்கில் சிக்கி இருந்தார். அதனைத் தொடர்ந்து அவரது ரத்த மாதிரியில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தி இருப்பது தெரியவந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன் பின் ஸ்ரீகாந்த இடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கழுகு திரைப்பட நடிகர் கிருஷ்ணாவை காவல்துறையினர் கைது செய்ய திட்டமிட்டனர். ஆனால் அதற்குள் நடிகர் கிருஷ்ணா தலைமறைவாகினார். இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய தீவிர தேடுதலில் கேரளாவில் நடிகர் கிருஷ்ணா தலைமுறைவாகி இருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து நேற்று மாலை அவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அதன் பின் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில், தான் போதை பொருள்களை பயன்படுத்தியது இல்லை எனவும், எனக்கு ஏற்கனவே இதய நோய், இரைப்பைப் பிரச்சனைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய உடல் நல பிரச்சனைகளால் தன்னால் போதைப் பொருட்களை உட்கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார். மேலும் சில விருந்து நிகழ்ச்சிகள் மூலமாக நடிகர் ஸ்ரீகாந்த் தன்னுடைய நல்ல நண்பர் மட்டுமே அவர் கூறிய அனைத்தும் தவறான தகவல் போதைப் பொருள் கும்பலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என காவல் துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து காவல்துறையினர் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதனை அடுத்து பரிசோதனையின் அறிக்கைகள் வெளிவந்தவுடன் எந்த முடிவும் எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.