இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் வெளியான வீடியோ ஒன்றில் குட்டி யானை ஒன்று செய்த செயல் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது.

அதாவது ஒரு அகன்ற சாலையில் யானைகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக சென்று கொண்டிருந்தது. அந்த யானையின் மேல் பாகன்கள் அமர்ந்திருந்த நிலையில் கடைசியாக நடந்து சென்ற யானையின் பின்னால் ஒரு குட்டி யானையும் சென்று கொண்டிருந்தது.

அந்த குட்டி யானை சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த காய்கறி வண்டியிலிருந்து வெள்ளரிக்காயை எடுத்து சாப்பிட முயன்றது. அதனை பார்த்த வியாபாரியும் அவர் அருகில் நின்ற பெண்ணும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் அந்த யானைக்கு வெள்ளரிக்காயை கொடுத்ததும், அதனை வாங்கிய யானை அமைதியாக அங்கிருந்து சென்றது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அனைவரது மனதையும் கவர்ந்துள்ளது. யானையின் தந்திரமில்லாத இனிமையான செயல் அன்பையும் சிரிப்பையும் வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. மேலும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் நிகழ்ந்த இந்த சம்பவம் இயற்கையுடன் கூடிய ஒரு இனிய தருணமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.