திருச்சியில் அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பாஜக அதிமுக கூட்டணியை அதிமுக தொண்டர்களே ஏற்றுக் கொள்ளவில்லை. திமுக கூட்டணியில் புகைச்சல் எதுவும் இல்லை. எல்லாம் சுமூகமாக தான் உள்ளது. கூட்டணி கட்சியினர் தோழமையுடன் இருக்கிறார்கள்.

கூட்டணி தலைவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்கிறார். கூட்டணி தொடர்பான விவகாரங்களை அவர் பார்த்துக் கொள்வார். எங்கள் கூட்டணியில் ஏதாவது பிரச்சனை வருமா என்று சிலர் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் கூட்டணியில்தான் பிரச்சனை இருக்கிறது. எங்கள் கூட்டணியில் பிரச்சனை இல்லை என்று கூறினார்.