
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பனகர் பகுதியில், 32 வயதான ப்ரீத்தி திவாரி என்ற பெண் குழந்தை இல்லாத காரணத்தால் மன அழுத்தத்தில், பிளேடால் தனது கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலை செய்ய முயன்றார். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு நடந்ததாகக் கூறப்படுகிறது. குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஜபல்பூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ப்ரீத்தி, ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்றபோதும், புதன்கிழமை காலை 11 மணியளவில் உயிரிழந்தார். போலீசாரின் ஆரம்ப விசாரணையில், குழந்தை இல்லாத வருத்தம், தொடர்ந்து மன அழுத்தம் போன்ற காரணங்களால் ப்ரீத்தி இந்த முடிவை எடுத்ததாக கணவர் மற்றும் மாமா ராம்குமார் ஆகியோர் தெரிவித்தனர். பலமுறை உறவினர்கள் சமாதானம் கூறியும், ப்ரீத்தி மனநிலை மாறவில்லை எனவும் கூறப்படுகிறது.
பனகர் காவல் நிலையம் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. போலீஸ் இன்ஸ்பெக்டர் விபின் தாம்ராகர் கூறியதாவது, மரணத்திற்கான காரணம் குறித்து உறுதிப்படுத்த பரிசோதனை அறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது. யாரேனும் தூண்டுதல் காரணமாக இருந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.