இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது அந்த வீடியோவில் பார்பர் ஷாப் ஒன்றில் வாலிபர் ஒருவர் சேரில் அமர்ந்திருக்கிறார். அவரது காலில் காகம் ஒன்று வந்து நிற்கிறது. இதையடுத்து வாலிபர் கடையில் இருந்த சீப்பை கொண்டு காகத்தின் தலையை வாரி விடுகிறார். இதில் காகம் அமைதியாக நிற்கிறது. சிறிது நேரம் கழித்து வாலிபர் அந்த சீப்பை மீண்டும் கீழே வைக்கிறார்.

 

ஆனால் காகம் மீண்டும் அந்த சீப்பை எடுத்து வாலிபரின் கையில் கொடுக்கிறது. இதையடுத்து மீண்டும் அந்த வாலிபர் தலையை வாரி விடுகிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.