
சென்னை மாவட்டம் திருவொற்றியூர் மணலியை சேர்ந்தவர் குமாரசாமி(64). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல் குமாரசுவாமி கடந்த 14ஆம் தேதி வேலைக்கு சென்றுள்ளார்.
காலை 9 மணியளவில் நிறுவனத்தின் மெயின் கேட்டை மூடிய போது திடீரென கேட் அடியோடு சரிந்து குமாரசாமி மேல் விழுந்தது. இதனால் குமாரசாமி கேட்டின் அடியில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
चेन्नई में लोहे का गेट गिरने से चौकीदार की दर्दनाक मौत, वायरल हुआ हादसे का CCTV
एक प्राइवेट कंपनी के गेट को बंद करते समय 60 वर्षीय कुमारासामी पर भारी लोहे का गेट गिर पड़ा. गंभीर रूप से घायल होने के बाद उन्हें अस्पताल ले जाया गया, जहां मंगलवार को उनकी मौत हो गई. Manali Police ने… pic.twitter.com/bC49jSvCv2
— AajTak (@aajtak) June 24, 2025
அப்போது அங்கிருந்தவர்கள் குமாரசாமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். குமாரசாமியின் கால் மற்றும் மார்பு பகுதிகளில் பலமான காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
நேற்று அதிகாலையில் குமாரசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குமாரசாமி குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.