உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரின் சகேரி பகுதியில் உள்ள வாட்டர் வாலில், நண்பர்களுடன் விருந்துக்குச் சென்ற 24 வயதான ஷிகர் சிங், குளத்தில் குளிக்கும்போது தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்துள்ளது.

உயிரிழந்த ஷிகர் யசோதா நகர் பகுதியைச் சேர்ந்தவர், சமீபத்தில் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தவர். அவரது தந்தை சைலேந்திர சிங், தாய் பீனு மற்றும் சகோதரி அனாமிகா ஆகியோர்.

இச்சம்பவம் குறித்து அறிந்து  உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சானிக்வான் போலீசார், ஷிகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஷிகர் குளத்தில் முகம் குப்புற விழுந்ததால் நீரில் மூழ்கி இறந்ததாக தெரியவந்தது.

இது தொடர்பாக சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் உறவினர்களிடம் காட்டப்பட்டன. உறவினர்கள் எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் குறித்து சகேரி காவல் நிலைய பொறுப்பாளர் சந்தோஷ் குமார் சுக்லா கூறியதாவது, “முதற்கட்ட விசாரணையில், இது ஒரு விபத்து என தெரிகிறது. தற்போது எந்த புகாரும் அளிக்கப்படவில்லை.

இருப்பினும், உறவினர்கள் அல்லது பிறர் புகார் அளித்தால், அதன்பேரில் வழக்கு பதிவு செய்து மேலதிக விசாரணை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார். இச்சம்பவம் காரணமாக ஷிகரின் குடும்பத்தில் பெரும் சோகம் நிலவுகிறது.