
மதுரையில் இன்று பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி பிரமாண்டமாக மதுரையில் நடைபெறும் நிலையில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த முருக பக்தர்கள் மாநாட்டில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. அறுபடை வீடுகள் போன்ற அரங்கம் அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகளுடன் இந்த விழா தொடங்கிய நிலையில் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற ஒரு பெண் உயிரிழந்து விட்டார்.
அதாவது சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த 20 பேர் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். இவர்களுடன் சென்ற கவிதா என்ற ஒரு 55 வயது பெண்ணுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு கவிதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறிவிட்டனர். மேலும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு கலந்து கொள்வதற்காக சென்ற ஒரு பெண் செல்லும் வழியில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.