
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, டிஎஸ்பி செந்தில்குமார் உத்தரவின் பேரில் நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்யபிரபா தலைமையில் சார்பு ஆய்வாளர் அபினேஷ் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது சிலுக்குவார் பட்டி தெற்கு தெரு பகுதியில் குடும்பத்தோடு சேர்ந்து வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் பாண்டியம்மாள் (50) மற்றும் மகள்கள் மல்லிகா (31), பிரியா (27) ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவர்களது வீட்டில் நடத்திய சோதனையில் ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து 3 பெண்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து தொடர்விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.