இன்றைய காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விலங்குகளை வைத்து வேடிக்கை வீடியோக்கள் வெளியிடுவது அதிகரித்து வருகிறது.

அதேபோன்று சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அந்த வீடியோவில் சின்னஞ்சிறு சிறுமி தனது இரண்டு கைகளிலும் இரண்டு பாம்புகளை எடுத்துக் கொண்டு வந்து தனது தாயிடம் காட்டுகிறார்.

 

அதற்கு அவரது தாயார் இது என்ன? என அந்த சிறுமியிடம் கேள்வி கேட்கிறார். அதனைத் தொடர்ந்து தனது சகோதரரிடம் ஒன்றைப் பிடித்துக் கொள்ளுமாறு கூறுகிறார். ஆனால் அந்த சிறுவன் பாம்பை பார்த்து பயந்து ஓடுகிறார்.

இருப்பினும், அந்த சிறுமி விடாமல் தனது சகோதரனிடம் பாம்பை கொடுக்க முயற்சிக்கிறார். பின்னர் அந்த சிறுவனும் ஒரு பாம்பை கையில் வாங்கி விளையாடுகிறார்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.