
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒரு 28 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண் அந்தேரி பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வரும் நிலையில் நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆன்லைன் டேட்டிங் செயலி மூலமாக ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த 27 வயது வாலிபருடன் பழகிய டாக்டர் பின்னர் செல்போன் நம்பர்களை பரிமாறிக் கொண்டு நெருக்கத்தை அதிகப்படுத்தினர்.
இந்த வாலிபர் செல்போனில் மணிக்கணக்கில் பேசிய நிலையில் பின்னர் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். அந்த வாலிபர் பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் போதெல்லாம் தன்னுடைய செல்போனில் அதனை போட்டோ எடுத்து வைத்துள்ளார். இதன் காரணமாக கடந்த ஆண்டு இறுதியில் பெண் கர்ப்பமாகவே இது பற்றி வாலிபரிடம் கூற அவர் கட்டாயமாக கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியுள்ளார்.
அதாவது கருக்கலைப்பு செய்ய முதலில் டாக்டர் மறுத்த நிலையில் அந்த வாலிபர் உல்லாசமாக இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பரப்பி விடுவேன் என மிரட்டியதால் வேறு வழியில்லாமல் அவரும் கருக்கலைப்பு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணுடன் பேசி பழகுவதை வாலிபர் தவிர்த்த நிலையில் சந்தேகம் அடைந்த அந்த பெண் விசாரிக்கவே அவருக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது தெரிய வந்தது. மேலும் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் டாக்டர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.