
சீனாவில் ஜென்ஹாவோ ஜு (28) என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் உயர் கல்விக்காக தற்போது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தங்கி இருந்தார். இந்நிலையில் இணையதளம் மூலம் பல பெண்களிடம் பழகிய நிலையில் அவர்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் இவர் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஜென்ஹாவோவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பின் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் 10 பெண்கள் இவரால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.
இவர் மீதான வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ஜென்ஹாவோ வை குற்றவாளி என அறிவித்தார். இதைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு இவர் மீது மேலும் சந்தேகம் வந்ததால் ஜென்ஹாவோவால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாராவது இருந்தால் தாமாக முன்வந்து வாக்குமூலம் அளிக்கலாம் என்று அறிவித்திருந்தனர்.
அதன்படி 24 பெண்கள் இவரால் பாதிக்கப்பட்டிருப்பதாக வாக்குமூலம் அளித்தனர். இந்நிலையில் பல பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஜென்ஹாவோவிற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் அந்த இளைஞரால் பாதிக்கப்பட்ட 24 பெண்களின் வாக்குமூலங்கள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.