
உத்திர பிரதேசம் மாநிலம் ஜான்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரீட்டா என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. ஆனால் அந்த பெண் யஸ்வந்த் என்ற வேறோரு இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
திடீரென வீட்டில் திருமணம் செய்து வைத்ததால் ரீட்டா யஸ்வந்த் நினைவாகவே இருந்துள்ளார். இந்த நிலையில் ரீட்டா தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு சென்றபோது மீண்டும் காதலன் யஸ்வந்தை சந்தித்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதுகுறித்து அறிந்த அரவிந்த் ரீட்டாவை அழைத்து வர அவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ரீட்டா வர விருப்பமில்லை என மறுத்து விட்டதால் அரவிந்த் மீண்டும் திரும்பி சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து அரவிந்த் தனது மனைவியை யஸ்வந்துடன் சேர்த்து வைக்க முடிவு செய்துள்ளார். அதன்படி இருவருக்கும் ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்தார்.
இதுகுறித்து சிலர் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். அதில் 1981 ஆம் ஆண்டு வெளியான அந்த ஏழு நாட்கள் திரைப்படத்தில் பாக்யராஜ் அம்பிகா இருவரும் காதலித்து இருப்பார்கள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் அம்பிகா ராஜேஷ் என்பவரை திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
ஆனால் திருமணத்திற்கு பிறகும் அம்பிகா பாக்யராஜை நினைத்துக் கொண்டிருந்ததால் ராஜேஷ் அம்பிகாவை அவருடைய காதலனுடன் சேர்த்து வைக்க முடிவு செய்திருப்பார். தற்போது அந்தப் படத்தில் உள்ள கதை போன்றே உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த அரவிந்த் என்பவரும் தன் மனைவி ஆசையை நிறைவேற்றுவதற்காக காதலனுடன் சேர்த்து வைத்துள்ளார்.