சாயல்குடி அருகே பணத்திற்காக தோழியை பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள எம் கரிசல்குளம் கிராமத்தில் உத்தரவள்ளி என்பவர் வசித்து வந்துள்ளார்.

இவரது தோழி ஜோதி. இந்நிலையில் ஜோதி என்பவர் உத்தரவள்ளியிடம் கடனாக பணம் கேட்டபோது அவர் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜோதி உத்திரவள்ளியை விறகு வெட்டும் வேலைக்கு அழைத்துச் செல்வது போல் கரிசல்குளம் ஓடை பகுதியில் வைத்து அரிவாளால் தாக்கி கொலை செய்துவிட்டு 4 சவரன் நகையை திருடி சென்றுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உத்தரவள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து காவல்துறையினர் தோழி ஜோதியை கைது செய்தனர். உத்தரவள்ளி கடைசியாக ஜோதியுடன் சென்றதைப் பார்த்த உறவினர்கள் அளித்த தகவலின் படி குற்றவாளியான ஜோதியை பிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.