கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது கிராமப்புறத்தில் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவிட 50% மானியம் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பம் வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

கிராமப்புறங்களில் சிறிய அளவிலான 10 நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவிட 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் 2025 26 ஆம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணைக்கு தேவையான கோழி கொட்டகை, கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவின செலவு ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியம் மாநில அரசு வழங்கும்.

மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கி மூலமாகவோ, தனது சொந்த ஆதாரங்கள் மூலமாக பயனாளிகள் திரட்ட வேண்டும். ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான நாட்டுக்கோழி குஞ்சுகள் 50 சதவீத மானியத்தில் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து வழங்கப்படும்.

இந்த நாட்டு கோழி பண்ணையை கட்டுவதற்கு பயனாளிகளிடம் குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். இந்தப் பகுதி மனித குடியிருப்பில் இருந்து விலகி இருக்க வேண்டும். பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தர வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

30 சதவீதம் பயனாளிகள் தாழ்த்தப்பட்ட பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஏற்கனவே நாட்டுக்கோழி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகளோ, அவர்தம் குடும்பத்தினரோ இதில் பயன்பெற முடியாது.

மேற்கண்ட தகுதி வாய்ந்த விருப்பம் உள்ள பயனாளர்கள் ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா, நில உரிமை ஆவணம் தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் 3 வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பம் அளித்து பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.