
சாலை விபத்தில் சிக்கிய நபர்களை “Golden Hour” எனப்படும் முதலாவது ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் சேர்க்கும் நபர்களுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து ஊக்குவிப்புத் தொகையும் பாராட்டு சான்றிதழும் வழங்கி வருகிறது.
“Good Samaritan” திட்டத்தின் கீழ், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நபர்களை தன்னலமின்றி காப்பாற்றிய பொதுமக்களுக்கு மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ₹5,000 மற்றும் மாநில அரசு ₹5,000, என மொத்தமாக ₹10,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை விபத்து நடந்ததிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள் அருகிலுள்ள மருத்துவமனை அல்லது சிகிச்சை மையத்தில் சேர்த்து அவர்களின் உயிர்களை காப்பாற்றும் சாதாரண பொதுமக்கள் இந்த உதவித் தொகைக்குத் தகுதியானவர்களாக இருக்கலாம்.
தற்போது இந்த அறிவிப்பு செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. உரிய நபர்கள் தங்கள்:
- பெயர்
- முகவரி
- விபத்து நேர்ந்த தேதி, நேரம், இடம்
- காப்பாற்றிய நபர் தொடர்பான தகவல்கள்
மேற்கூறிய தகவலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகலாம்.
உங்கள் மனிதநேய செயலுக்கு நன்றி தெரிவிக்க இந்த “Good Samaritan” திட்டம் ஊக்கமாக அமையும். இதுபோன்ற ஒரு உதவியை நீங்கள் ஏற்கனவே செய்திருந்தால், முறையான ஆவணங்களுடன் விரைந்து விண்ணப்பிக்கவும்.
மேலும் விவரங்களுக்கு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை நேரில் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.