தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 1.14 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் 15 ஆம் தேதி 1000 ரூபாய் பணம் வழங்கப்படும் நிலையில் விடுபட்ட மகளிர் மற்றும் புதிதாக ரேஷன் கார்டு பெற்ற பெண்களும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் நிலையில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் தமிழ்நாட்டில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்துள்ளார்.