தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு விழாவில் கலந்து கொண் பேசிய முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளார். அந்த அறிவிப்பில், மக்களின் குறைகளைப் போக்குவதற்காக  முகாம்களை நாடு முழுவதும் அமைத்து அனைவரின் கோரிக்கைகளை நிறைவேற்ற போவதாக கூறினார்.

அந்த முகாம்கள் வரும் ஜூலை 15ஆம் தேதி முதல்  13-க்கும் மேற்பட்ட அரசுத்துறைகள், 40-க்கும் மேற்பட்ட சேவைகள், கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்கள், மருத்துவ முகாம்களுடன் தமிழ் நாடெங்கும் 10,000 இடங்களில் “உங்கள் ஊரில், உங்களை தேடிவரும் உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது இணையதள பக்கத்திலும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.