புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்காலில் நேருக்கு நேர் மோதி 2 பைக்குகள் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 2 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸிர்க்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால் ஆம்புலன்ஸ் சுமார் 1 மணி நேரம் கழித்து வந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே மேலும் 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதனால் காரைக்கால் அரசு மருத்துவமனை வளாகத்தின் முன்பு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி ஆம்புலன்ஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பின்னரே போராட்டம் கைவிடப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.