
குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்குச் செல்ல திட்டமிடப்பட்ட விமானம், அகமதாபாத் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோகம் மறைவதற்குள் அமெரிக்காவில் மற்றொரு பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியது.
சிகாகோவில் இருந்து பாஸ்டன் சென்ற ஜெட் ப்ளூ விமானம் தரையிறங்க முயன்றது. அப்போது ஓடுபாதையை விட்டு விலகியது. விமானியின் சாதுரியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் ரன்வே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் பாஸ்டன் ஸ்லோகன் விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது