
பெங்களூருவில் கள்ளக்காதலனுடன் மனைவி தனிமையில் இருந்ததை பார்த்த கணவன் மனைவியின் தலையை துண்டித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனைக்கல் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் மானசா தம்பதியினருக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த சில வாரங்களாக மானசா வேறொரு நபருடன் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் சங்கர் வழக்கம் போல வேலைக்கு சென்ற பிறகு, மானசா தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளார். ஆனால் மனைவியின் மீது சந்தேகம் அடைந்த சங்கர் நள்ளிரவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அங்கு மனைவி வேறொரு நபருடன் இருந்ததை பார்த்த சங்கர் மனைவியையும் அவரது கள்ளக்காதல் காதலனையும் தாக்கியுள்ளார்.
இதனால் கள்ளக்காதலன் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், ஆத்திரம் அடங்காமல் சங்கர் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையை எடுத்துக்கொண்டு நேராக காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.