
ஐபிஎல் 18 வது சீசனில் பெங்களூர் அணி முதல் முறையாக கோப்பையை வென்ற நிலையில் சின்னச்சாமி மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது ஏராளமான ரசிகர்கள் கூடியதால் கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டு பயங்கர நெரிசல் ஏற்பட்டது.
இந்த நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கர்நாடகா உயர்நீதிமன்றம் தானாக இந்த வழக்கை முன்வந்து விசாரித்தது.
இந்த வழக்கில் கர்நாடக கிரிக்கெட் சங்கம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தற்போது திடீரென நிர்வாகிகள் அனைவரும் தானாக முன்வந்து ராஜினாமா செய்துள்ளனர்.
அதன்படி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சங்கர், பொருளாளர் ஜெயராம் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தின் எதிரொலியாக அவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.