ஜப்பானின் பாபா வங்கா என அழைக்கப்படும் ரியோ டெட்சுகி என்ற பெண் தீர்க்கதரிசியின் ஓவியம் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மங்கு கலை ஓவியரான ரியோ டட்சுகி தனது கனவுகளில் காணும் சம்பவங்களை வரைபவர். அவர் 1980 முதல் தனது கனவுகளை வரைய தொடங்கியுள்ளார்.

அவர் வரைந்த ஓவியங்கள் அடுத்த சில ஆண்டுகளில் அப்படியே நடந்ததாக கூறப்படுகிறது. 1991 ஆம் ஆண்டு பிரட்டி மெர்குரியின் மரணம், 1995 ஆம் ஆண்டு கோகே  நிலநடுக்கம், 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமி இதனை அடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றுநோய் போன்ற பேரழிவுகள் குறித்த இவரது ஓவியங்கள் முன்கூட்டியே துல்லியமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தனது ஓவியத்தின் மூலம் பின் நடக்க உள்ள பேரழிவுகளை முன்கூட்டியே கணிக்கும் வல்லமை பெற்றவராக ஜப்பானிய மக்கள் இவரை அங்கீகரித்தனர். மேலும் இவரது ஓவியங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டும் வருகிறது.

தற்போது வரும் ஜூலை மாதம் 2025 ஆம் ஆண்டு ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலுக்கு அடியில் ஏற்படும் மிகப்பெரிய பிளவு காரணமாக 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியை விட 3 மடங்கு அதிக பயங்கரமான சுனாமி ஏற்பட உள்ளதாக ரியோ டட்சுகி கனித்துள்ளார்.

இது குறித்த ஓவியங்கள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அவரது ஓவியங்களில் ஜப்பான் தெற்கு பகுதிகளில் கடல் கொந்தளிப்பது போல காட்சிகளும், அப்பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படக்கூடிய காட்சிகளும் உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஜப்பானிய அரசு இதுவரை எந்த ஒரு  எச்சரிக்கையும் தெரிவிக்கவில்லை. ஆனால் சீன தூதரகம் இயற்கை பேரழிவு குறித்து நாட்டு மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனால் ஜப்பானிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பலர்  தங்களது பயணங்களை ரத்து செய்துள்ளனர். எனவே ஜப்பானுக்கான விமானம் முன்பதிவுகள் 83% வீழ்ச்சி அடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக கிழக்கு ஆசியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது பயணங்களை ரத்து செய்துள்ளனர்.