தமிழகத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி JEE (A) தேர்வில் வென்று IIT- ல் படிக்க தேர்வாகியுள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, தந்தையை இழந்தாலும், அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் சல்யூட்.

அவரது உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். ராஜேஷ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதுதான் IIT-க்கு உண்மையான பெருமையாக அமையும். அதற்காக நமது #திராவிட மாடல் அரசு தொடர்ந்து உழைக்கும் என கூறியுள்ளார்.