தென்னிந்திய நடிகர் ராணா டகுபதி தற்போது புதிய வலைத் தொடரான ‘ராணா நாயுடு சீசன் 2’ வெளியீட்டை முன்னிட்டு விளம்பர பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், விமான நிலையத்தில் ராணா எடுத்த வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பெண் எதிர்பாராதவிதமாக மோதியதால், ராணாவின் மொபைல் தரையில் விழுந்தது. இதனைக் காணும் போது அவர் கோபத்துடன் குழுவில் ஒருவரை திட்டிய காட்சி வெளியாகியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

 

இந்த வீடியோ இணையத்தில் பரவியவுடன், பலரும் ராணாவின் நடத்தை குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கினர். சிலர், “போன் விழுந்ததற்கு அந்தப் பெண் காரணமாக இருந்தும், நீங்கள் கேமராமேனிடம் கோபம் காட்டியது என்பது தவறு,” என விமர்சனம் செய்தனர். மற்றொருவர், “மகாராணி சிவகாமினி ஓடிப் போகவில்லை… சாதாரண போன்தான்,” என ஏளனமாகக் கூறினார். மேலும், “தோல்வியடைந்த நடிகர்களால் இப்படித்தான் தங்களை விளம்பரத்துக்கு கொண்டு வர முயற்சிக்கிறார்கள்,” எனவும் கருத்துகள் பதிவாகின.

இதே நேரத்தில், ‘ராணா நாயுடு 2’ ஜூன் 13ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியிடப்பட உள்ளது. இந்த தொடரில் ராணா,  வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் அவரை விமர்சிக்கின்றனர்.