விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார் பொரியல் கல்லூரியில் செஸ் போட்டி நடைபெற்றது. மாநில அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் 18 மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

200க்கும் மேற்பட்ட அணிகளுடன் 395 வீரர், வீராங்கனைகள் இந்த செஸ் போட்டியில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட ஒவ்வொரு அணிக்கும் ஐந்து பிரிவுகளில் மூன்று சுற்றுகளாக நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு வயது வரம்பு இல்லை.

5 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் செஸ் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியில் முதல் 3 வெற்றியாளர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.