தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இன்று இரண்டாம் கட்ட பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்ற நிலையில் ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்ட நிலையில் நடிகர் விஜய் அவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

இந்நிலையில் இப்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கல்வி விருது வழங்கும் விழாவினை விமர்சித்து பேசியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அவர் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ஒரு நடிகரை குற்றம் சொல்ல மாட்டேன். ஒரு வயசு பெண்ணை கூட்டிட்டு போறான்.

2 கிராம் பரிசு கொடுத்ததும் முட்டாள் பயலுங்களுக்கு அறிவு வேண்டாமா. பெற்று வளர்த்து ஆளாக்கி நாளை மற்றொருவர் மனைவியாக வாழக்கூடிய ஒரு பெண்ணை அம்மா, அப்பா மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் எப்படி ஒரு சினிமா கூத்தாடியை கட்டிப்பிடிக்க அனுமதிக்கலாம்.

இது ஈனப்பிறவி. இதுவா தமிழனின் கலாச்சாரம். விஜய் அஜித் மற்றும் ரஜினி ஆகியோர் நடித்திருந்தார்கள் என்றால் அவர்களை பாராட்டுங்கள். அதை விட்டுட்டு விஜய் அண்ணா என்று கூறிவிட்டு இதையெல்லாம் பெற்றோர்கள் அனுமதிக்காதீங்க. இதுவா தமிழ் சமூகம், இதுவா தமிழருடைய பாரம்பரியம். இதையா வீர குல பெண்கள் வாழ்ந்த தமிழ் சமூகம் என்கிறோம்.

எந்த கூத்தாடி பயலுக வீட்டு வாசலிலும் பேய் நிற்காதீங்க. எந்த கூத்தாடி பயல்களுக்கும் பிறந்தநாள் என்றால் என்ன.? அவர்களின் படம் 100 நாள் ஓடினால் என்ன.? ஓடிவிட்டால் என்ன.? அவனா உங்களுக்கு சோறு போட போகிறான்? அவனா உன் பிள்ளைக்கு ஸ்கூல் பீஸ் கட்டப் போகிறான். அவனா பள்ளிக்கூடம் கட்டப் போகிறான் என்று கூறியுள்ளார். மேலும் இவர் நடிகர் விஜய் தரக்குறைவான வார்த்தைகளால் மிகவும் மோசமாக விமர்சித்துள்ளது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.