
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வீ.கே.புரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த செல்வம்(30). இவர் மீது ஏற்கனவே போக்சோ வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த செல்வம் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில் எஸ்.பி மாவட்ட கலெக்டர் சுகுமாரிடம் இந்த இளைஞர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்காக பரிந்துரை செய்துள்ளார். இதனால் மாவட்ட கலெக்டர் ஆனந்த செல்வம் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். கலெக்டர் உத்தரவின் பெயரில் ஆனந்த செல்வம் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.