மத்திய அரசு நக்சலைட்டுகளை முற்றிலும் அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகளை ஒழிக்கும் வேளையில் வீரர்கள் தீவிரமாக எடுப்பட்டு வருகிறார்கள். அதன்படி சத்தீஸ்கர் மாநிலம் நாராயணபூர், பிஜபூர் மாவட்டங்களுக்கு இடையில் அடர்ந்த காட்டுப்பகுதி ஒன்று உள்ளது. அங்கு 4 மாவட்டத்தின் மாவட்ட ரிசெவ் காடு காவல்துறையினர் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அபூஜ்மாத் மற்றும் இந்திராவாதி தேசிய பூங்கா இடையில் உள்ள காட்டில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 26 – க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் கொலை செய்யப்பட்டனர். இதில் பசவராஜு என்று அழைக்கப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் நம்பலா கேசவ் ராவ் கொலை செய்யப்பட்டார். இந்தியாவில் மிகவும் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தலைவர்களில் இவரும் ஒருவர். இவரை பிடிப்பதற்காக ரூபாய் 1.5 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.