
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிக்குத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி பல்லவி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகளும் உள்ளனர். பிள்ளைகள் வெளியூரில் தங்கி படித்து வருவதால் மோகன்ராஜ் மளிகை கடையை பார்த்து வருகிறார்.
நேற்று பல்லவி மட்டும் வீட்டில் தனியாக இருந்த போது இரவு நேரம் திடீரென வந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி பல்லவியை மிரட்டியுள்ளனர். பின்னர் பல்லவியின் கழுத்தில் வெட்டி அவரை வீட்டிற்கு பின்புறம் துணிகளை துவைக்கும் பகுதிக்கு தரதரவென இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர் பல்லவிடமிருந்து ஐந்து பவுன் தங்க நகை திருடி விட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இதனையடுத்து பல்லவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து அக்கம் பக்கத்தினர் ரத்தக்காயத்துடன் மயங்கி கிடந்த பல்லவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அதே பகுதியை சேர்ந்த இரண்டு வாலிபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.