
ஆந்திரா மாநிலம் அன்னமைய்யா மாவட்டத்திற்கு அடுத்துள்ள பாலாமுவாரி பள்ளி அருகே இன்று அதிகாலை கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அங்கு சாலையோரம் இருந்த கிணற்றில் கார் வேகமாக பாய்ந்தது. இதில் காரில் பயணம் செய்த 3 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் கிணற்றில் கவிழ்ந்து விழுந்த காரை மீட்டு அதிலிருந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.