இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) வெளியிட்ட அறிவிப்பில், TATA IPL 2025 தொடரை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மே 17 முதல் மொத்தம் 17 போட்டிகள் 6 இடங்களில் நடைபெறவுள்ளன. இதில் இரண்டு ஞாயிறுகளில் இரட்டைப் போட்டிகளும் இடம்பெற உள்ளன.

பிளேஆஃப் சுற்றுகள் தொடர்பான விவரங்கள் வருமாறு: குவாலிபையர் 1 – மே 29, எலிமினேட்டர் – மே 30, குவாலிபையர் 2 – ஜூன் 1, மற்றும் இறுதிப்போட்டி – ஜூன் 3 அன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளுக்கான இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என BCCI தெரிவித்துள்ளது.