
மும்பையின் கல்யாண்-சிஎஸ்டி இடையே இயக்கப்படும் பெண்கள் சிறப்பு மின்சார ரயில் தாமதமானதால், பெண்கள் ரயிலின் வெளிப்புறத்தில் தொங்கிக்கொண்டே பயணம் செய்யும் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தினமும் லட்சக்கணக்கான பயணிகளை ஏற்றிச் செல்லும் மும்பை லோக்கல் ரயில்கள், பலமுறை தாமதமாவதும், பிளாட்பாரங்களில் மிகுந்த கூட்டம் ஏற்படுவதும் வழக்கமாகிவிட்டது. குறிப்பாக இந்த ரயில் 40 நிமிடங்கள் தாமதமானதால், பலர் வேறு வழியின்றி ரயிலின் அடிப்பலகை மற்றும் உள்ளே இடமின்றி வெளியே தொங்கிக்கொண்டு பயணிக்க நேர்ந்துள்ளது.
#ViralVideo #CRFixLocalTrainDelays Today’s Ladies Special from Kalyan was delayed by 40 mins, forcing women to hang on the footboard—an unsafe and risky commute. Railways term this dangerous, yet delays continue. @AshwiniVaishnaw pls review delay data. @MumRail @rajtoday pic.twitter.com/vnhxTIyFD6
— Mumbai Railway Users (@mumbairailusers) May 9, 2025
இந்த வீடியோவை பகிர்ந்த Mumbai Railway Users கணக்கு, “இது பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் விஷயம்” என குறிப்பிட, Railway Seva உடனடியாக பதிலளித்து, சம்பவம் தொடர்பான தகவல் மத்திய ரயில்வே பாதுகாப்பு படைக்கு (RPF) மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்தது.
பொதுமக்கள் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளனர். “தாமதம் ஒரு விஷயம், ஆனால் இந்த மாதிரியான செயல்கள் உயிரிழப்புக்கே வழிவகுக்கும்” என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், “AC ரயில்கள், தானாக மூடிய கதவுகளுடன் விரைவில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்” எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம், மும்பையில் பொதுப் போக்குவரத்து பாதுகாப்புக்கான முன்னுரிமை தேவை என்பதைக் கொட்டிப்பொழியும் வகையில் உள்ளது.