ஜம்மு & காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் நகரத்தில் உள்ள டக் பார்க் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற தால் ஏரியில் இன்று பிற்பகல் திடீரென படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிர் தப்பிய நிலையில், இன்னொருவர் மாயமானார். அதாவது ஒரு படகில் இருவர் மீன்பிடிப்பதற்காக சென்ற நிலையில் திடீரென பலத்த காற்று வீசியதால் படகு கவிழ்ந்தது. இதில் அப்துல் மஜீத் கோசா என்பவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டதால் நலமுடன் இருக்கிறார்.

 

ஆனால் அவருடன் சென்ற மற்றொருவர் மாயமானார். அவரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மாநில பேரிடர் மீட்பு படையினர் களத்தில் இறங்கியுள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் நீரோட்டம் வலுவாக இருப்பதால் அந்த நபரை மீட்கும் பணிகள் சிக்கலாக மாறியுள்ளது என்று தகவல் வெளிவந்துள்ளது.