கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் எருமேலி என்ற இடத்தில் சத்தியபாலன் (56), ஸ்ரீஜா (50) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 29 வயதில் அஞ்சலி என்றும் மகளும், 22 வயதில் அகிலேஷ் என்ற மகனும் இருந்த நிலையில் இதில் அஞ்சலி வெளிநாட்டில் நர்சாக பணிபுரிந்து வந்துள்ளார். இதில் சத்தியபாலன் ஒரு ஒலிபெருக்கி நிலையம் வைத்து நடத்தி வந்த நிலையில் அந்த கடையில் வேலை பார்க்கும் ஒரு வாலிபரை அஞ்சலி காதலித்து வந்துள்ளார். கடந்த 4 நாட்களுக்கு முன்பாக அஞ்சலி வெளிநாட்டில் இருந்து வந்த நிலையில் தன்னுடைய காதல் விவகாரத்தை பெற்றோரிடம் கூறி அந்த வாலிபரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார்.

ஆனால் இதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திடீரென ஸ்ரீஜா வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டு தீ வைத்தார். அவரைக் காப்பாற்ற சென்ற சத்தியபாலன் மற்றும் அஞ்சலி மீதும் தீப்பிடித்து எரிந்த நிலையில் வீட்டில் குளித்துக் கொண்டிருந்த அபிஷேக் மீதும் தீப்பிடித்தது. இதில் ஸ்ரீஜா சத்திய பாலன் அஞ்சலி ஆகியோர் உயிரிழந்த நிலையில் அபிஷேக் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார். இதில் அவர்களுடைய மொத்தவீடும் தீப்பிடித்து எரிந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.