தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி அன்று தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் வின்சென்ட் என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்டம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த விசாரணையின் போது தற்போதைய டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 8 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமாக விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து காவலர்கள் 8 பேரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.