
கர்ஜட் ரெயில்வே நிலையத்தில் உள்ள ஒரு உணவுக் கடையில் இருந்து வாங்கிய வடை பாவில் சோப்புத் துண்டு இருந்தது, ஒரு பெண் பயணியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. இந்த சம்பவம் பிளாட்பார்ம் எண் 2-ல் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடந்தது. உடனே அந்த பெண் பாதுகாப்பு காவலரிடம் புகார் தெரிவித்தபோதும், அவர் முறையாக நடவடிக்கை எடுக்காமல், 4:30 மணி காலை வரச் சொல்லி தவறான முறையில் நடந்துகொண்டார் என கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக ரயில்வே நிலைய அதிகாரியிடம் தகவல் கொடுத்த நிலையில் இது தொடர்பாக சமூக வலைதளத்திலும் பதிவிடப்பட்டது. பின்னர் ரெயில்வே துறை, சம்பந்தப்பட்ட V.K. Jain என்ற கடையின் சேவையை உடனடியாக நிறுத்தி, கடையின் மீது நடவடிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் ரெயில்வே நிலையங்களில் உணவுப் பாதுகாப்பு குறித்து கடுமையான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் அவசியம் என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது.