
தமிழக சட்டசபையில் நேற்று கச்ச தீவை மீட்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இதற்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முதல்வர் ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அதாவது கச்சத்தீவு மீட்பு தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்த நிலையில் கேள்வி நேரத்தின்போது எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
அவர் பேசும்போது திமுக அரசு கடந்த நான்கு வருடங்களில் கச்சத்தீவை மீட்பதற்காக என்ன செய்தது என்ற கேள்வி எழுப்பினார். அதன் பிறகு 16 வருடங்கள் 5 பிரதமர்கள் தலைமையில் மத்தியில் ஆட்சியில் இருந்த போது திமுக கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுத்தது என்று கேட்டார்.
இதற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் வழங்கினார். அவர் கூறும் போது, நாங்கள் செய்தது இருக்கட்டும் முதலில் நீங்கள் பதவியில் இருந்த போது என்ன செய்தீர்கள் என்று சொல்லுங்கள். அண்மையில் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்றார். மேலும் அப்போது கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்தாரா என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டார்.