உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில் சவுரப் ராஜ்புத் என்ற 32 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் லண்டனை தளமாகக் கொண்ட வணிக கடற்படை அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முஸ்தோன் ரஸ்தோகி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 6 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இதில் சவுரப் லண்டனில் இருக்கும் நிலையில் அடிக்கடி இந்தியா வந்து தன்னுடைய மனைவி மற்றும் மகளை பார்த்துவிட்டு செல்வார். இந்நிலையில் தன்னுடைய மனைவி தகாத உறவில் இருப்பது சில நாட்களுக்கு முன்பாக சௌரப்புக்கு தெரிய வந்தது.

இதன் காரணமாக தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மகனை மட்டும் வளர்க்க முடிவு செய்தார். ஆனால் குடும்பத்தினர் விவாகரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மகனின் எதிர்காலத்தை நினைத்து அந்த முடிவை அவர் கைவிட்டார். அதோடு தன்னுடைய மனைவியையும் அவர் மன்னித்து ஏற்றுக் கொண்ட நிலையில் மீண்டும் லண்டன் சென்ற அவர் கடந்த மாதம் தன்னுடைய மனைவி மற்றும் மகனின் பிறந்த நாளுக்காக இந்தியா வந்தார். அப்போது அவர் தன்னுடைய மனைவி தொடர்ந்து அந்த வாலிபருடன் தகாத உறவில் இருப்பதை தெரிந்து கொண்டார்.

அவர்களுக்குள் நடந்த ஆபாசமான வாட்ஸ் அப் உரையாடல்களையும் அவர் பார்த்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில் கோபத்தில் முஸ்கான் தன்னுடைய கணவனை காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி கடந்த மார்ச் 7ஆம் தேதி முஸ்கான் தன்னுடைய கணவனுக்கு மயக்க மருந்து கொடுத்து பின்னர் அவருடைய இதயத்தை கள்ள காதலனுடன் சேர்ந்து பல முறை குத்தி கிழித்தார். பின்னர் சவுரப்பின் தலை உட்பட உடம்பினை 15 துண்டுகளாக வெட்டி ஒரு ட்ரம்பில் போட்டு சிமெண்ட் போட்டு மூடிவிட்டு தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு சிம்லாவுக்கு சென்று விட்டார். இதற்கிடையில் சௌரப்பை காணவில்லை என அவருடைய சகோதரர் போலீசில் புகார் கொடுத்த நிலையில் தன்னுடைய அண்ணி முஸ்கான் மீது தான் சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

சௌரப்பின் வங்கி கணக்கில் 6 லட்ச ரூபாய் இருந்த நிலையில் அதனை முஸ்கான் மற்றும் அவருடைய கள்ளக்காதலன் எடுக்க முயன்றனர். ஆனால் அந்த பணத்தை எடுக்க முடியாததால் தன் பெற்றோரிடம் முஸ்கான் பணம் கேட்டார். அவர்கள் கணவன் குறித்து கேட்டதற்கு மழுப்பலாக பதில் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து பெற்றோரிடம் தான் கொலை செய்ததை முஸ்கான் கூறிய நிலையில் அவர்கள் பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். முஸ்கானை தூக்கில் போடும்படி அவருடைய தாய் கூறியுள்ளார். இந்நிலையில் சௌரப்  உடல் பாகங்களை காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அடுத்தடுத்து தெரியவந்துள்ளது.

அதாவது கொலை நடந்தது அவருடைய உறவினர்களுக்கு தெரிய கூடாது என்பதற்காக செல்போனை முஸ்கான் பயன்படுத்தி உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் உரையாடியுள்ளார். ஆனால் தொடர்ச்சியாக அழைப்புகளை எடுக்காததால்  தான் குடும்பத்தினர் சந்தேகப்பட்டு போலீசாரை அணுகவே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. மேலும் போலீசார் கொலை செய்யப்பட்டது தெரிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போது தன்னுடைய அப்பா ட்ரம்பில் இருக்கிறார் என்று அந்த குழந்தை தான் அவர்களுக்கு காட்டி கொடுத்தது. மேலும் குடும்பத்தினரை உதறிவிட்டு காதலிக்காக வாழ்ந்த கணவனை இப்படி 15 துண்டுகளாக கூறு போட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.