
டெல்லி கொஹாட் என்க்ளேவ் பகுதியில் முன்னாள் துணிக்கடை உரிமையாளர் மொஹிந்தர் சிங் (70) மற்றும் அவரது மனைவி தில்ஜீத் கவுர் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், மொஹிந்தர் சிங் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதும், அவரது மனைவி இரும்புக் கம்பியால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, மூன்று நாட்களுக்கு முன்பு இந்த தம்பதியினர் வீட்டில் புதிய கவனிப்பாளரை பணியில் நியமித்திருந்தனர், ஆனால் தற்போது அவர் காணவில்லை. மேலும், வீட்டில் உள்ள லாக்கரை உடைக்கும் முயற்சி செய்யப்பட்டுள்ளதும் போலீசாரின் சந்தேகத்தை அதிகரிக்க வைத்துள்ளது.
அந்த தம்பதியின் மகன்கள் மற்றும் மகள் அருகிலேயே வசித்திருந்தாலும், கடந்த மூன்று நாட்களாக தங்களின் பெற்றோரை பார்க்க செல்லவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை, வீட்டின் முகப்பு கதவை திறக்க முடியவில்லை என புகாரளித்ததை அடுத்து, குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்த போது தந்தையின் உடல் படுக்கையிலும், தாயின் உடல் மற்றொரு அறையிலும் கிடந்ததுள்ளது.
CCTV காட்சிகளை ஆய்வு செய்ததில், புதிய கவனிப்பாளர் ஒரு பையை வைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியிருப்பது தெரியவந்துள்ளது. தற்போது அந்தக் கவனிப்பாளரை கண்டுபிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவரை வேலைக்கு பரிந்துரைத்த முந்தைய கவனிப்பாளர் ரவியையும் கைது செய்ய காவல்துறையினர் தேடி வருகிறது.