
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதாவது ரமலான் மாதத்தை முன்னிட்டு இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கும் நிலையில் அந்த கட்சியின் தலைவர் விஜயும் கலந்து கொள்கிறார். அதன்படி இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகளை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கவனித்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 3000 பேர் வரை கலந்து கொள்ள இருப்பதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ள நிலையில் இதற்காக அழைப்பிதழும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ் மிகவும் கவனத்தை ஈர்த்துள்ளது.
பொதுவாக அரசியல் கட்சிகளின் சார்பில் அழைக்கப்படும் அழைப்பிதழ்களில் அவர்களுடைய கட்சி பெயர் மற்றும் புகைப்படங்கள் போன்றவைகள் இடம்பெறும். ஆனால் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில்அச்சடிக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் விஜயின் புகைப்படம், கட்சியின் கொடி உட்பட வேறு யாருடைய பெயரோ இடம்பெறவில்லை. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு மாவட்டத்திற்கு 5 இஸ்லாமிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.