டெல்லியில் உச்ச நீதிமன்றத்தின் கீழ் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீண்ட காலமாக லிவ்விங் உறவில் இருக்கும் ஒரு பெண் தனது காதலனுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட வங்கி அதிகாரி ஒருவர் 16 ஆண்டுகளாக தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றி விட்டதாக பெண் பேராசிரியர் ஒருவர் வழக்கு பதிவு செய்திருந்தார்.

இதனை அடுத்து வங்கி அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்திப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் நீதிபதிகள் கூறியதாவது, லிவ்விங் உறவில் இருந்த இருவருமே நன்கு படித்தவர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் விருப்பப்பட்டு உறவை பாதுகாத்து வந்துள்ளனர். இந்த வழக்கு காதல் தோல்வி சார்ந்தது. இது உணர்வு ரீதியான வழக்காகும் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியுடன் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக பேராசிரியர் தன்னுடைய விருப்பத்துடன் உறவில் இருந்து வந்துள்ளார்.

ஆனால் தன்னை திருமணம் செய்து கொள்வதாக போலியான வாக்குறுதி அளித்ததால் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இருவரும் ஒருமித்த கருத்துடன் உறவை வளர்த்த போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிவது பாலியல் வன்கொடுமை ஆகாது. இதனை அடுத்து குற்றம் சாட்டப்பட்ட வங்கி அதிகாரி மீதான வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அதே சமயம் திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடன் 16 ஆண்டுகளாக பாலியல் உறவில் ஈடுபட்டதாக புகார் அளித்த பெண் பேராசிரியரின் மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.