நேற்று முன்தினம் உலகமெங்கும் காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தன்று நடந்த பல்வேறு நிகழ்வுகள் செய்தியாக வந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில் டெல்லி மெட்ரோ நிலையத்தில், தனது காதலனை மற்றொரு பெண்ணுடன் பார்த்த காதலி, அவரை நேருக்கு நேர் சந்தித்து கையும் களவுமாக பிடித்துள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில், ” சிவப்பு உடையில் இருக்கும் பெண் ஒருவர் மெட்ரோ நிலைய தளத்தில் தனது காதலனுடன் கடுமையாக வாக்குவாதம் செய்கிறார்.

வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில் அந்த நபர் அப்பெண்ணை கீழே தள்ளி  விட்டதால் மேலும் கோபமடைந்த பெண்,”நீ உன்னை என்ன நினைக்கிறாய்? என்னை தொட உனக்கு யாரு சொன்னது?” என்று கேட்கிறார்.  ஒருகட்டத்தில் வாக்குவாதம் முடிவடைந்து அந்தப்பெண் அங்கிருந்து சென்றுவிடுகிறார். இந்த விடியோவானது பார்வையாளர்களை அதிர்ச்சியடையச் செய்கிறது. இந்த வீடியோ  தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.