உத்திரபிரதேச மாநிலம் பிஜினார் மாவட்டத்தில் ரோஹித்-பார்வதி தம்பதியினர் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டியிருந்ததால் ரோஹித் தனது மனைவியிடம் தயாராகும்படி கேட்டுக் கொண்டார். அந்த சமயம் ரோஹித் மது குடித்திருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த பார்வதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் மனைவி இறந்ததை அறிந்ததும் ரோஹித் மிர்சாபூர் பேலா ரயில் நிலையம் அருகே சென்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் ரோஹித், பார்வதி ஆகியோரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.