இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம்  இறங்கினர். ரோகித் சர்மா 2 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதையடுத்து விராட் கோலி களம் இறங்கினார். இதில் இந்தியா 10 ஓவரில் 52 ரன்களை கடந்தது. 17 வது ஓவரில் சுப்மன் கில் அரை சதம் அடித்தார்.

இந்த தொடரின் 3-வது அரை சதம் இதுவாகும். மறுமுனையில் விராட் கோலி 50 பந்தில் அரை சதம்  அடித்தார். இந்த போட்டியில் விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிராக 4000 ரகளை கடந்தார். இதன் மூலம் 3 அணிகளுக்கு எதிராக 4000 ரண்களை கடந்த இந்திய பேட்ஸ்மேன் என்று சாதனையை படைத்துள்ளார். சுப்மன் கில் 25 ரன்கள் எடுத்திருக்கும் போது, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2500 ரன்கள் தொட்டார். இது அவருடைய 50-வது ஒரு நாள் போட்டியாகும். ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்சில் 2500 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.