பிரபல நடிகையான சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதிலிருந்து மீண்டு தற்போது சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாக சைதன்யா நடிகை சோபிதாவை திருமணம் செய்து கொண்டார். நாக சைதன்யா சமந்தா விவாகரத்து பற்றி சோசியல் மீடியாவில் பல கருத்துக்கள் உலா வரும்.

அதில் பலரும் சமந்தாவுக்கு ஆதரவாகவும் நாக சைதன்யாவுக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் சமந்தாவை விவாகரத்து செய்தது குறித்து நாக சைதன்யா கூறியதாவது, நானும் சமந்தாவும் தனிப்பட்ட காரணங்களுக்காக விவாகரத்து செய்யும் முடிவை எடுத்தோம். இருவருமே ஒருவருக்கொருவரை மதிக்கிறோம். ஆனால் ஏன் என்னை குற்றவாளியை போல் பார்க்கிறீர்கள்? ஒரு உறவை முறித்துக் கொள்வதற்கு முன் நான் ஆயிரம் முறை யோசிப்பேன். ஏனெனில் அதன் பின் விளைவுகளை பற்றி எனக்கு நன்றாக தெரியும். இது இருவரும் இணைந்து எடுத்த பரஸ்பரம் முடிவு என கூறியுள்ளார்.